search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி"

    மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு வழியனுப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பங்கேற்பதாக தெரியவந்துள்ளது. #PranabMukherjee #RSSprogramme
    மும்பை:

    ஆர்.எஸ்.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்டரிய சுவயம்சேவக் சங் அமைப்பின் தலைமை அலுவலகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரின் ரேஷிம்பாக் பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ‘சங் ஷிக்‌ஷா வர்க்-துருட்டிய வர்ஷ்’ எனப்படும் 25 நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமில் நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்துள்ள 708 தொண்டர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    பயிற்சிகள் முடிந்து இந்த முகாமில் இருந்து செல்பவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி வழியனுப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் வருகைதர சம்மதித்துள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த மேலிட பிரமுகர் இன்று தெரிவித்துள்ளார்.
    #PranabMukherjee #RSSprogramme
    ×